2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சைக்கிளை பின்னால் வந்த கப் ரக வாகனமொன்று மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது. சைக்கிளில் பயணித்த  உடையார் கட்டுப்பகுதியைச் சேர்ந்த எஸ்.தர்சன் (18), மதுஷன் (10) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் மூங்கிலாறு வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .