2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கசிப்பு, கள்ளு வைத்திருந்த இருவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதியின்றி கசிப்பு மற்றும் கள்ளு வைத்திருந்த இருவருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் 20,000 ரூபா தண்டம் விதித்தார்.

இச்சந்தேக  நபர்களை திங்கட்கிழமை (17)  மேற்படி  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, கள்ளு வைத்திருந்தவருக்கு 5000 ரூபாவும்  கசிப்பு வைத்திருந்தவருக்கு 15,000 ரூபாவும் நீதவான்  தண்டம் விதித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பகுதியில் 6 ¼ போத்தல் கள்ளு வைத்திருந்த ஒருவரை கடந்த 2ஆம் திகதி அக்கராயன் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதேவேளை, வட்டக்கச்சியில் 750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவரை கடந்த 13ஆம் திகதி வட்டக்கச்சிப் பொலிஸார்; கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .