2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆலய நிர்மாண பணிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின் 
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்;பட்ட நட்டான்கண்டல் கிராமத்தில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்மாணப்பணிகளுக்கென ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தயாநந்தன் தெரிவித்தார்.

குறித்த ஆலய நிர்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை வைபவரீதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

'குறித்த பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் என்னிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட்; பதியுதீன், மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஆலயத்தின் நிர்மாணப்பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தனது நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவை ஒதுக்கித் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .