2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் மனைவியை தாக்கியதாகக் கூறப்படும் கணவனை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன்  உத்தரவிட்டார்.

சந்தேக நபரை மேற்படி நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (19) ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மனைவியின் கையை அடித்து முறித்ததாகக் கூறப்படும் கணவனை பூநகரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (18) மாலை கைதுசெய்தனர்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான மனைவி பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .