2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கடும் வரட்சி; விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடும் வரட்சியான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழிருக்கும் 9 முக்கிய குளங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் இன்று (03) தெரிவித்தார்.

வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 14 அடி 5 அங்குலமாக  குறைந்துள்ளதுடன் கல்மடுக் குளத்தில் 6 அடி 7 அங்குலமும், அக்கராயன் குளத்தில் 5 அடி 1 அங்குலமும் கனகாம்பிகைக் குளத்தில் 4 அடி 9 அங்குலமாக நீர்மட்டம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வன்னேரிக் குளத்தில் 5 அடி 4 அங்குலமும், புதுமுறிப்புக் குளத்தில் 6 அடி 1 அங்குலமும், பிரமந்தனாறுக் குளத்தில் 4 அடி 3 அங்குலமும், குடமுறுப்பாட்டுக் குளத்தில் 6 அடி 5 அங்குலமும், கரியாலை நாகபடுவான் குளத்தில் 3 அங்குலமாகவும்  நீர் மட்டங்கள் காணப்படுவதாக  அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதுடன்  கிணறுகளின் காணப்படும் நீர்மட்டங்களின் அளவு கணிசமாக குறைவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .