2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்தவர்களுக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பொது இடத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இருவருக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

மேற்படி இரு நபர்களும், மதுபோதையில் ஏ – 35 வீதியில் (பரந்தன் -  முல்லைத்தீவு) ஒழுங்கீனமாக நடந்துகொண்டபோது, கிளிநொச்சிப் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிமை 19) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கமைய இருவருக்கும் தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X