2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மதுபோதையில் கப் ரக வாகனத்தை செலுத்திச் சென்ற நபருக்கு 7,500 ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டார்.

மேலும், மேற்படி நபரது சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாதங்களுக்குத் தடை செய்யமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து மேற்படி நபர் கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தவேளையில், மேற்படி நபர் மன்றில் சமூகமளிக்க முடியாததை நீதிமன்றுக்கு  தெரியப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து, மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி நபர் மன்றில் ஆஜராகியிருந்தார். இதன்போது, நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X