2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் காயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் வியாழக்கிழமை(22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், இன்று அதிகாலை 12.45 மணியளவில் கடமை முடிந்து ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற சமயம் கன்டர் ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸாh தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X