2025 ஜூலை 16, புதன்கிழமை

காலாவதியான குளிர்களி விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காலாவதியான குளிர்களி (ஐஸ்கிரீம்) விற்பனை செய்த கிளிநொச்சி நகர்ப்பகுதி கடை உரிமையாளருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

கிளிநொச்சிப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் வியாழக்கிழமை (28) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், காலாவதியான குளிர்களிகளை விற்பனை செய்த மேற்படி கடைக்காரர் பிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி கடைக்காரருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதவான் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X