2025 ஜூலை 16, புதன்கிழமை

தாக்குதல் சம்பவத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரத்தில் இடம்பெற்ற கைகலப்பில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பிரபல எழுத்தாளர் சிவகருணாகரன் மற்றும் அவரது இரண்டு மகன்மாரே படுகாமயடைந்துள்ளனர். இவர்களில், சிவகருணாகரன் மற்றும் அவரது இளைய மகன் இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மூத்த மகன் சிவகருணாகரன் ஹேமந்த் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நகர்ப்பகுதியிலுள்ள கடையொன்றில் வைத்து சிவகருணாகரனின் இளைமகன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தட்டிக் கேட்கச் சென்ற சிவகருணாகரன், மற்றும் அவரது மூத்த புதல்வர் மீதும் மேற்படி நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X