2025 ஜூலை 16, புதன்கிழமை

பன்றி இறைச்சி விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரப் பகுதியில் பன்றி இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், பன்றி இறைச்சியை கிலோ 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்துகொண்டிருக்கும் போது, கடந்த சனிக்கிழமை (30) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அத்துடன், அவரிடமிருந்து 2 கிலோகிராம் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, சந்தேகநபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, இன்று திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X