2025 ஜூலை 16, புதன்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குழுமோதல் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களில் ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க உத்தரவிட்ட கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், மற்றைய சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்லவும் அனுமதியளித்தார்.

2010ஆம் ஆண்டு, கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தவேளை, மேற்படி இரண்டு நபர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இந்நிலையில், மேற்படி இரு நபர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணைக்கமைய மேற்படி இருநபர்களும் ஞாயிற்றுக்கிழமையன்று (31) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (01) மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஒரு சந்தேகநபர் தன்னால் மன்றிற்குச் சமூகமளிக்க முடியாத காரணத்தை சட்டத்தரணியூடாக மன்றில் தெரிவித்தார். இதனையடுத்து, அந்நபருக்கு நீதவான் பிணை வழங்கினார்.

இருந்தும், மற்றைய நபர் எவ்வித காரணங்களும் தெரிவிக்காததையடுத்து, நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X