2025 ஜூலை 16, புதன்கிழமை

வான் மோதி இராணுவ வீரர் பலி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், ற.றஜீவன்

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீது  வானொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், குருநாகலை சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார் (வயது 32) என்ற இராணுவ வீரரே பலியாகியுள்ளார். இவர், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X