2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முழுங்காவில் பகுதியில் கன்ரர் ரக வாகனம் புதன்கிழமை (03) மதியம் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில், சோலைநிலா குடியிருப்பைச் சேர்ந்த சு.தமிழ்மாறன் (வயது 07) என்ற மாணவனே உயிரிழந்துள்;ளார்.

பஸ்ஸில் இருந்து இறங்கி, மாணவன் அந்த பஸ்ஸுற்கு முன்னால் சென்ற வேளை, பஸ்ஸை முந்திக்கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம் மாணவனை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன், முழங்காவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மாணவனது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கன்ரர் ரக வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவன் முழங்காவில் ஆரம்ப மகா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X