2025 ஜூலை 16, புதன்கிழமை

வீட்டிலிருந்தவர்களை கட்டிவைத்து கொள்ளை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன், குமரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் வியாழக்கிழமை (04) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களை கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த 6 இலட்சத்து 7,500 ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
 
வீட்டின் முன் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள், வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோரைக் கட்டிவைத்துவிட்டு, வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகைகள் மற்றும் 7500 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் வியாழக்கிழமை (04) காலை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மோப்ப நாயுடன் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X