2025 ஜூலை 16, புதன்கிழமை

பார்வையற்றோருக்கு உலர் உணவு வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


சுவிஸ் நாட்டிலுள்ள புலம்பெயர் அமைப்பான எழுகை அமைப்பால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பார்வையற்றோர்கள் 150 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர்உணவு பொருட்கள் வியாழக்கிழமை (04) வழங்கப்பட்டன.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்க அலுவலகத்தில் சங்கத்தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்து இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வன்னி பார்வையற்றோர் சங்கத்திலுள்ள அங்கத்தவர்களுக்கு, எழுகை நிறுவனம் சுழற்சி முறையில் இந்த உலர் உணவு பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X