2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு

George   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(6) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளதுடன் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இணை பொருளாளர்களாக அன்ரனி ஜெகநாதன் மற்றும் இரட்ணசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

செயற்குழு தலைவராக இரா.சம்பந்தனும் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன்.செல்வராஜா மற்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.பரஞ்சோதி, ஏ.எம்.இமாம் ஆகியோரும், கட்சியின் துணைச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர்களாக அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார் ஆகியோர் தெரிவாகினர். நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் தெரிவு செய்யப்பட்டார். சட்டத்துறை செயலாளராக சி.தவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்கை பரப்பு செயலாளராக கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டபோதிலும் அவர் அதனை மறுத்து, அப்பதவியை கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.வேளமாலிகிலனை பிரேரித்திருந்தார்.

இன்று தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விபரங்கள் நாளை இடம்பெறவுள்ள தேசிய மாநாட்டில் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0

  • anton Sunday, 07 September 2014 07:58 AM

    பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X