2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்

George   / 2015 ஜனவரி 19 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்


கடற்கொந்தளிப்பு குறைவடைந்ததையடுத்து முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை (17) இரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தமிழ்மிரருக்கு திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.

கடற்கொந்தளிப்பால் கடந்த 12ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை. 

தற்போது கடலுக்கு செல்லும் மீனவர்கள், சாவாலை, பாலை, கும்பிளா போன்ற மீன்களை அதிகளவில் பிடித்து வருகின்றனர்.
 
இந்திய றோலர்களின் அத்துமீறல்களும் முல்லைத்தீவு கடலில் தற்போது குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .