2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி

Gavitha   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று (03) கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். தேவராஜா தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.


'பயங்கரவாத தடைச்சட்டம்' எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும். 'அரசியல் கைதிகள்' எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.


இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு 'சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்' பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.


குறித்த இரகசிய முகாம்கள், 'இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்' என்பன பற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
'கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்' தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும்.

'மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்' பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 'நீதி மற்றும் இழப்பீடுகள்' வழங்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இந்த பேரணி நடைபெற்றது.


இதன்போது, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி. பாஸ்கரா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் சிந்திரகுலசிங்கம், வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபை உப தவிசாளர் ரவி, உறுப்பினர் க. பரமேஸ்வரன், தர்மலிங்கம் மற்றும் மனியத உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .