Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 22 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் அலெகஸ்ராஜா ஆசிர்வாதம் கிறேசியன், இன்று ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 5 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டஇந்திய மீனவர்கள் 33 பேரை, கடற்படையினர் கைது செய்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசிர்வாதம் கிறேசியன் முன்னிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago