2025 ஜூலை 12, சனிக்கிழமை

புதுமுறிப்பு குளத்தின் கீழ் 800 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

George   / 2015 மார்ச் 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி, புதுமுறிப்பு குளத்தின் கீழ் இந்தாண்டு 800 ஏக்கரில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுமுறிப்புக் குளம் புனரமைக்கப்பட்டு அணைக்கட்டு உயர்த்தப்பட்டமையால் நீர் சேகரிக்கும் அளவு அதிகரித்துள்ளது. 

குளத்தில் தற்போது உள்ள நீரின் மூலம் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும். 276 விவசாயிகள் இக்குளத்தினால் பயனடைவார்கள் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .