Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 24 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எதிர்க்கட்சி என்ற தகுதியையும் அந்தஸ்தையும் இழந்துள்ளது. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கு உரித்தானது இல்லை என தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்தும் அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபாலடி சில்வா, கௌரவமான முறையில் பதவி விலகி, பிரதான எதிர்க்கட்சியான தமிழத் தேசியக் கூட்டமைப்புக்;கு அப்பதவியை வழங்க வேண்டும்.
இதுவே ஜனநாயகத்துக்;கும் நல்லாட்சிக்குமான அடையாளமாகும்.
இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளமையால், நாடாளுமன்றத்தில் 3ஆவது பிரதான கட்சியாகவும் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளுகின்ற தகுதியும் உரிமையும் எம்மிடமே தற்போது வந்து சேர்ந்துள்ளது.
இதை நாம் தட்டிப்பறிக்கவும் இல்லை. யாரும் தட்டிப்பறிக்க இடம் கொடுக்கவும் முடியாது. ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்க ஆசைப்படுவதற்காக எமக்கான உரிமையை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.
உலகின் எந்த ஜனநாயக மூலைகளிலும் நடவாத எல்லை தாண்டும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எமது நாடாளுமன்றத்துக்குள் ஜனாதிபதியோ, சபாநாயகரோ நல்லாட்சியின் பெயரால் அனுமதிக்க கூடாது.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டும். கட்சித்தலைமை உறுதியான முடிவை இவ்விடையத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago