2025 ஜூலை 10, வியாழக்கிழமை

துணுக்காயில் 313 முதியவர்களுக்கு உதவித்தொகை

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் தேசிய செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 2000 ரூபாய் உதவித்தொகையை துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 313 முதியவர்கள் பெற்றுவருவதாக துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன், புதன்கிழமை (01) தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  எமது பிரதேச செயலக பிரிவில் 20 கிராம அலுவலர் பிரிவுகளையும் சேர்ந்த முதியவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாதாந்தம் 6 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் சமூக சேவைகள் அமைச்சால் அனுப்பி வைக்கப்படுகின்றது.  

பிரதேச செயலக பிரிவில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 7 பேர் தலா 500 ரூபாயும், காசநோயால் பாதிக்கப்பட்ட 3 பேர் தலா 500 ரூபாயும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 19 பேர் தலா 500 ரூபாயும் மாதாந்தம் பெற்று வருகின்றனர். இதற்கான நிதியை சமூக சேவைகள் அமைச்சு வழங்கி வருகிறது என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .