2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விபத்தில் குழந்தை பலி: மூவர் காயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பனிக்கங்குளத்தில் முச்சக்கரவண்டியொன்றை பிக்கப் ரக வாகனம் மோதியதில், குழந்தை பலியானதுடன் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து புளியங்குளம் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை, யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோதியுள்ளது.

வீதியின் குறுக்காக மாடொன்று சென்றநேரம் பிக்கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாட்டில் மோதி, பின்னர் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

பிக்கப்ரக வாகன சாரதியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .