2025 ஜூலை 12, சனிக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய நால்வர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 மீனவர்களை புதன்கிழமை (08) கைது செய்ததாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பளார் ஜே.சுதாகரன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று அதிகாலை இரண்டு மணிமுதல் நந்திக்கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இறால், மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் அந்தப்பகுதிக்குச் சென்ற எமது திணைக்களத்தின் அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த கடலில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட தங்கூசி, கூட்டு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகளும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பளார் ஜே.சுதாகரன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .