Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைக்குழி கிராமத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பாலைக்குழி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நேற்றுமுன்;தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
கடும் மழை பெய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட மின்னல் தாக்கத்துக்கு உள்ளான மூத்த சகோதரனான முஹமட் சபாயுள்ளா ஜெசிம் (வயது 27) என்பவர் குளத்தினூள் விழுந்தார்.
மற்றையவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த இளைஞர் உடனடியாக கரைக்கு வந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக உறவினர்கள் குறித்த குளத்துக்கு சென்று தேடியபோதும் இளைஞரை மீட்கமுடியவில்லை.
மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தேடியபோது குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
6 hours ago