2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மறவன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

அடிப்படை வசதிகள் உட்பட கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளை பெற்றுத்தர கோரி வவுனியா மறவன்குளம் மக்கள், மறவன்குளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் இதுவரை தமக்கான அடிப்படை வசதிகள் எதையும் செய்துக்கெடுக்கவில்லை என அம்மக்கள் தெரிவித்தனர்.

சில நிர்வாக அமைப்புகள் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .