2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கசிப்பு காய்ச்சுதலை தடுக்குமாறு மகஜர்

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, செல்வபுரம் அதிகரித்துக் காணப்படும் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மற்றும் சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மல்லாவி பொலிஸாருக்கு பொதுமக்கள் மகஜர் ஒன்றை கடிதம் மூலம் சனிக்கிழமை (06) அனுப்பியுள்ளனர்.

அத்துடன், அது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த பல நாட்களாக தொடர்ச்சியான சட்டவிரோத கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளன.

புதிய புதிய ஆட்களின் நடமாட்டங்கள் காணப்படுவதுடன் இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளால் இக்கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் பல குடும்பங்களிடையே குடும்ப வன்முறைகள் இடம்பெறுகின்றன என மக்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X