2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குறைநிவர்த்தி நடமாடும் சேவை

Thipaan   / 2015 ஜூன் 07 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் குறைகள் நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையொன்றை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்தவுள்ளனர்.

மக்களை நோக்கிய குறை நிவர்த்தி நடமாடும் சேவை என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சேவையானது பாலிநகர் மகாவித்தியாலய மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் நடைபெறவுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் அமைச்சுக்களின் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு இறப்பு சான்றிதழ், சமுர்த்தி சேவைகள், கமநலசேவைகள், காவல்துறை சேவைகள், தொழில் திணைக்கள சேவைகள், இலங்கை மின்சார சேவைகள், இலங்கை போக்;குவரத்து சேவைகள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சேவைகள், பிராந்திய நீரியல் இன விரியலாக்கல் நிலைய சேவைகள், திருமண பதிவுகள், அஞ்சல் திணைக்கள சேவைகள் உள்ளிட்ட சேவைகள் இடம்பெறவுள்ளன.

நடமாடும் சேவையில் கலந்துகொள்ள வரும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X