2025 ஜூன் 30, திங்கட்கிழமை

டைனமெட் குச்சிகளுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சௌத்பார் கடற்கரைப்பகுதியில் சுமார் 190 டைனமெட் குச்சிகள்,  பற்றவைக்கும் திரி, வாகனம்; ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று பேர் குருநாகலையும் மற்றுமொருவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்கள் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X