2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Thipaan   / 2015 ஜூன் 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை  திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 2015 ஆம் ஆண்டின் 2ஆம் பிரிவுக்கான தொழிற்கற்கை நெறிகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என உதவிப் பணிப்பாளர் பண்டார தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் Nஏஞ (தேசிய தொழிற்தகமை சான்றிதழ்) மட்டத்திலான புதிய தொழிற்பயிற்சி கற்கை நெறிகளின் இரண்டாம் பிரிவுகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உங்கள் தகமைக்கேற்ப தொழிற்பயிற்சியுடன் கூடிய விரும்பிய  தொழிலை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் 06 மாத கற்கை நெறி முடிவின் பின்னர் மேலதிக பயிற்சியுடன் இணைக்கப்படுவதுடன் தொழில் வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர்;, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தோற் பொருள் உற்பத்தியாளர், மின்னியலாளர், காய்ச்சி இணைப்பவர்;, அழகுக்கலையும் சிகை அலங்காரமும் தையல் கணினி பட வரைஞர் மற்றும் மோட்டர் வாகன திருத்துனர் போன்றவை நடைபெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு.. இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, இல: 108, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா. எனும் முகவரியில் அல்லது தொலைபேசி இலக்கம் : 024-2221617,  071-1213357  தொடர்பு கொண்டு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X