2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாற்றுத்திரனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

Kogilavani   / 2015 ஜூன் 08 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் மாவட்ட அலுவலகம் இன்று திங்கட்கிழமை (08) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அவசியமானதாகும். அதிலும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு அரசாங்க உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் தங்குதடையின்றி மேற்கொள்ளப்படும். வாழ்வாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் இணைந்து சம்மேளனத்தின் ஊடாக திட்டம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். அந்தத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது இலகுவாக இருக்கும்.

மேலும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் மேற்கொள்வதற்கு இவ்வாறான  திட்டங்கள் உதவியாக இருக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X