Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 10 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்கின்ற முக்கிய குளமாக இரணைமடுக்குளம் இருப்பதன் காரணமாக குளத்தை அபிவிருத்தி செய்வதும் பராமரிப்பதும் எல்லோருடைய பொறுப்பாகுமென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு இரணைமடுக்குளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வருடங்களாக இக்குளம் புனரமைக்கப்படாமலுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்தக் குளத்தை புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன அதிகாரிகள், குளத்தின் வேலைத்திட்டங்களில் பங்குகொண்டுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
51 minute ago