2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா நரசிங்கர் ஆலயத்தில் திருட்டு

Sudharshini   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இடம்பெறவிருந்த றிலையில், ஆலயத்தின் பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை (16) வந்தவர்கள் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்து பரிபாலன சபையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

ஆலயத்திலுள்ள மூலஸ்தான விக்கிரகம் உடைக்கப்பட்டிருந்ததுடன் இறைவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் வெள்ளியிலான ஆடைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டிருந்ததென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X