2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு வேண்டும்'

Menaka Mookandi   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளைக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அனுசா கோகுல பெர்ணான்டோ தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சின்  மாற்றுத்திறனாளிகளை சமூக மட்டத்தில் வைத்து புனர்வாழ்வளிக்கும் சமுதாய மட்டத்திலான புனருத்தான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் (சி.பி.ஆர்) செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

மாவட்ட ரீதியாக மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றேன். அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளை திங்கட்கிழமை (15) சந்தித்து கலந்துரையாடினேன். அவர்கள் இதன்போது, தங்களுக்கான தேவைகள் பிரச்சினைகள் குறித்து என்னிடம் கூறினர்.

வாழ்வாதார உதவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறினர். அவர்களின் உற்பத்திகளுக்கான சந்தையை சமூக சேவை உத்தியோகத்தர்கள் அடையாளம் காணவேண்டும். உள்ளூர், வெளிமாவட்டம் அல்லது சர்வதேச சந்தையா? என்பதை அடையாளங்கண்டு அதற்கான ஏற்பாடுகளை அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பிரச்சினைகள், தேவைகள் குறித்து தொடர்ந்தும் அறிந்த வண்ணம் இருப்பேன். பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் நுழைவதற்கு ஏதுவான வசதியை ஏற்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக கூறினார்.

இதில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் சி.சத்தியசீலன் கருத்து கூறியதாவது,

'கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் பலவிதமான தேவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. போருக்கு பின்னர் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் உருவாகியுள்ளதுடன், அவர்களுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன. அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்' என்றார்.

மத்திய அரசின் சமூக சேவைகள் அமைச்சின் சி.பி.ஆர் திட்ட தேசிய இணைப்பாளர் எம்.ஆர்.சாந்தகுமார, சி.பி.ஆர் திட்ட கிளிநொச்சி இணைப்பாளர் சு.ஜெயானந்தராஜா, சமூக சேவைகள் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலர், மாவட்ட உளவள துணையாளர், 4 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த சமூக சேவைகள் அலுவலர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி அலுவலர்கள், சமூக சேவைகள் உதவியாளர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள்,  தொண்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X