2025 ஜூன் 28, சனிக்கிழமை

முகமாலை ஆயுர்வேத வைத்தியசாலை புனரமைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட முகாமலைப் பகுதியில் 2 மில்லியன் ரூபாய் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டு வருவதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகாமாலைப் பகுதியில் அமைந்திருந்த ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் நூல் நிலையம் ஆகியன கடந்த கால யுத்தம் காரணமாக முற்றாக அழிவடைந்தன. 

பளைப் பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பின்னர், முகமாலையில் இயங்கி வந்த பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பன பளையிலுள்ள தலைமைக் காரியாலய கட்டடத்தில் இயங்கி வந்தன.

முகமாலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில், மீளக்குடியேறி வசிக்கும் மக்களின் நலன்கருதி ஆயுர்வேத வைத்தியசாலையை மீண்டும் முகமாலையில் அமைக்க வேண்டிய அவசியமும் தேவையும் பிரதேச சபைக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னர் இருந்த இடத்தில் 2 மில்லியன் ரூபாய் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகின்றது. 

உப அலுவலகம் மற்றும் நூல் நிலையம் அமைப்பதற்கான நிதியை தந்துதவுறுமாறு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பிரதேச சபை கோரியுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .