Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 24 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய வீடமைப்பு தினத்தையொட்டியும் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் பிறந்ததினத்தையொட்டியும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று (23) செவ்வாய்க்கிழமை காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
'சமட்ட செவன' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட 12 பயனாளிகளுக்கு முதலாவது கட்ட கொடுப்பனவு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி மற்றும் மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி ஆர்.சுகர்னராஜா ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
27 Jun 2025