2025 ஜூன் 28, சனிக்கிழமை

மன்னாரில் மாபெரும் கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் கையெழுத்து வேட்டையொன்று நடைபெறவுள்ளது. மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில், மன்னார் நகர மண்டபத்தில் குறித்த கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது.

'அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கும் போது கருத்திற் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள்' என்னும் கணிப்பீட்டு ஒப்பந்தத்தில் பல சிரேஸ்ட அரசியல்வாதிகளும் பல கட்சிகளைச் சேர்ந்தோரும் கையொப்பமிடவுள்ளனர்.

இப்பிரகடனம், 'மார்ச் 12 பிரகடனம்' என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் இப்பிரகடனத்தில் உள்ள அனைத்து அளவு கோல்களையும் நாட்டின் பிஜைகள் வாசித்து புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கையெழுத்து வேட்டை நாடு பூராகவும் தொடராக இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 11.35 மணி தொடக்கம் 2.30 வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .