2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின், நவரத்தினம் கபில்நாத்

வவுனியா குருசுட்டகுளத்துக்கும் நெய்னாமடுவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹம்மது நிஜாஸ் மற்றும் புத்தளம் ஆலங்குடாவைச் சேர்ந்த ஏ.எச்.எம். ரியாஸ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கன்டர் ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு புத்தளம் நோக்;கி சென்ற போது, வாகனம் மரமொன்றில் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தினால் வாகனத்தில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், வாகனம் கடுமையாக சேதமாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .