Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
'இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு எமக்கு தேவை 60 மாதங்களே. எனவே, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுப்படுத்தி தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோரி நிற்;கிறோம்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முள்ளியவளையில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
'விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் இருக்கும் உங்கள் சகோதரர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடந்த 33 வருடங்களுக்கு பின்னர் நிம்மதியான ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
1982ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, அப்போதைய ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவுக்கு வருகை தந்ததிருந்தார். அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் போது இப்படி சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே, 33வருடங்களின் பின்னர் உங்களின் முகங்களை பார்த்து சுதந்திரமாக கூட்டத்தை நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
யுத்தத்தினால் இந்த முல்லைத்தீவு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் எதிர்பார்த்த வாழ்வாதாரம் வந்துசேரவில்லை. அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் முயற்சியால் கடந்த காலங்களில் இந்த பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, எங்களுடன் வந்துசேர்ந்து நல்லாட்சி அரசில் பங்காளியாக இருந்த அமைச்சர் ரிஷாதின் கரங்களை பலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டோம். மக்களின் ஆணையுடன் நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் நூறுநாட்களில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த நூறு நாட்களில் அபிவிருத்தி, சுதந்திரம் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனை நாம் ஏற்படுத்திக்காட்டினோம்;.
எட்டு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சி தமக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும். ஆனால், அதில் எந்த பயனும் கிடையாது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்க மக்கள் ஒன்றுபட்டு தேசிய அரசை உருவாக்க வேண்டும். அதற்காகவே தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத் தருமாறு கேட்கிறேன்.
நீங்கள் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் மாவட்டத்திற்கும் சேவை செய்ய வேண்டும். இதுவரை காலமும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மாத்திரமே உங்களுக்கு பணியாற்றினார். எனவே, அவருடன் இணைந்து பணியாற்ற இன்னும் பல உறுப்பினர்கள் தேவை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நாம் திட்டங்களை வகுத்திருக்கிறோம். அதுமாத்திரமின்றி, விஷேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.
அத்துடன், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குவதற்கும் எண்ணியுள்ளோம். வீடுகள் இன்றி இருக்கும் 10ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்கவுள்ளோம்.
இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இங்குள்ள விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் அளவுக்கு முல்லைத்தீவை அபிவிருத்தி செய்வதற்கு எண்ணியிருக்கிறோம். இவற்றுக்கு எமக்கு மீண்டும் அதிகாரம் தேவைப்படுகிறது. நூறுநாட்களில் இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்கினோமோ அதுபோல 60 மாதங்களில் நாட்டை புதியதோர் நாடாக மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும்.
எனவே, இந்த பொதுத் தேர்தலில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய நாடாளுமன்றத்தின் ஊடாக, நாட்டை கட்டியெழுப்புதற்கு உங்களின் ஆதரவுகளை நாம் கேட்கிறோம். நாம் கூடிய ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்தால் கொழும்பு, ஹம்பாந்தோட்டை மாத்திரம் அபிவிருத்தி அடையாது. உங்களுடைய மாவட்டமும் ஏனைய மாவட்டங்களைப் போல அபிவிருத்தி அடையும் என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago