2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தாழ்வுபாடு கடற்கரையிலிருந்து முண்டம் மீட்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் அனந்த்

மன்னார், தாழ்வுபாடு கடற்கரையில் தலையின்றி காணப்பட்ட உருக்குலைந்த நிலையிலான சடலமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

தாழ்வுபாடு கடற்கரையில் தலை அற்ற நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட அப்பகுதி மீனவர்கள், உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், அவ்விடத்துக்கு விரைந்த மன்னார் பொலிஸார், குறித்த சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அச்சடலம் தலை இன்றி காணப்பட்டதோடு கை, கால் மற்றும் உடற்பகுதிகள் மிகவும் சிதைவடைந்த நிலையில் உள்ளது என தெரிவித்த பொலிஸார், அதனை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் கூறினர்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .