2025 ஜூன் 21, சனிக்கிழமை

பற்றைக்காடாகியுள்ள சிறுவர் பூங்கா

George   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முட்கொம்பன் பகுதியில் பூநகரி பிரதேச சபையினால் புறநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று வரை பாவனைக்கு உட்படுத்தப்படாத நிலையில் பற்றைக்காடு மண்டிக்கிடக்கின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான கிராமிய மற்றும் சிறுநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பொருளாதார அமைச்சினுடாக 3.6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா, தற்;போது எந்தவித பயன்பாடுமின்றி பற்றைக்காடாக காணப்படுவதுடன் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. ஆகவே, இதனை பயன்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பூநகரி பிரதேச சபையை தொடர்புகொண்டு கேட்டபோது, விரைவில் இப்பூங்காவை பொதுமக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .