2025 ஜூன் 28, சனிக்கிழமை

விசாரணை மூடி மறைப்பு: டி.ஐ.ஜி.க்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா,குடாகஞ்சிகுடிய பகுதியில் புதைபொருள் தோண்டிய வர்த்தகர் தலைமையிலான குழுவை கைது செய்யாமல், விசாரணைகளை மூடிமறைத்ததாக கூறப்படும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே. திஸாநாயக்க  மற்றும் பிரதி பொலிஸ் மா காரியாலய பிரதான பரிசோதகர் சுஜீவ பிரியதர்ஷன வீரசிங ஆகிய இருவரையும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான வீ. ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்ட ஏனைய ஆறு சந்தேகநபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பிரகாரம், மற்றுமொரு சந்தேகநபருக்கு ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாவும் தண்டம் விதித்து பிணையில் விடுவித்தார்.

வவுனியா, குடாகச்சிகொடிய குளத்துக்கு அருகில், பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதியன்று பாறைகளை அகழ்ந்தனர் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தொல்பொருட்கள் அடங்கிய தளத்தை அழிப்பதற்கு இடம் வழங்கியதாக வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே. திஸாநாயக்க மற்றும் பிரதி பொலிஸ் மா காரியாலய பிரதான பரிசோதகர் ஆகிய இருவருக்கு எதிராகவும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பாரியளவில் அகழ்வினை மேற்கொண்ட இந்த தளத்துக்கு அண்மையிலேயே தோணிக்கல் கல்வெட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .