2025 ஜூலை 16, புதன்கிழமை

33 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கைக்காக, 8 குளங்களின் கீழ், 33 ஆயிரத்து 640 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் புதன்கிழமை (03) தெரிவித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடாந்தம் 59 ஆயிரம் ஏக்கரில் இருந்து 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்முறை குளங்களின் கீழ் 33 ஆயிரத்து 640 ஏக்கர் நிலப்பரப்பிலும், மிகுதி மானாவாரியாகவும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தவகையில், கல்மடு குளத்தின் கீழ் 3450 ஏக்கரும், பிரமந்தனாறு குளத்தின் கீழ் 602 ஏக்கரும், இரணைமடுக் குளத்தின் கீழ் 21985 ஏக்கரும், கனகாம்பிகைக் குளத்தின் கீழ் 250 ஏக்கரும், புதுமுறிப்பு குளத்தின் கீழ் 985 ஏக்கரும், அக்கராயன் குளத்தின் கீழ் 3417 ஏக்கரும், வன்னேரிக்குளத்தின் கீழ் 346 ஏக்கரும், கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ் 1505 ஏக்கரும், குடம்முறிட்டி குளத்தின் கீழ் 1100 ஏக்கரும் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, நிலத்தைப் பண்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

குளங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடை முழுமையாகக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும். 

இருந்தும் மானாவாரி எனப்படும் வானம் பார்த்துச் செய்யப்படும் நெற்செய்கையின் அறுவடை மழையை நம்பியே உள்ளது. சரியான காலத்தில் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டால் அந்த நெற்செய்கை பாதிப்படையும் அபாயமும் காணப்படுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X