2025 ஜூலை 17, வியாழக்கிழமை

496 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 496 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்;.ரவீந்திரன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால், கடந்த காலங்களில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதில் மாற்றம் கொண்டுவந்த அமைச்சு, தற்போது மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கி வருகின்றது.

ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 1 இலட்சத்து 12,500 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 31 மீனவர்களுக்கு கொடுப்பதற்கான உபகரணங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

மிகுதி மீனவர்களுக்கான உபகரணங்களும் கிடைக்கப்பெற்ற பின்னர், மீனவர்களிடம் உபகரணங்கள் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X