2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அக்கராயனில் 300 ஏக்கர் நெற்பயிர் செய்கை அழிவு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் கீழ் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் அழிவடைந்துள்ளதாக அக்கராயன் கமநலசேவை நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பாரிய நீர்;ப்பாசனக் குளமான அக்கராயன் குளம், கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக வான் பாய்ந்தது. இதனால் அதன் கீழ் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட, நாகதம்பிரான் கமக்காரர் அமைப்பின் கீழுள்ள 300 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.

அழிவடைந்த நெற்பயிர் தொடர்பான விவரங்களை மேற்படி கமக்கார அமைப்பு அக்கராயன் கமநலசேவை நிலையத்திடம் கையளித்துள்ளது. அதில் தங்கள் கமக்கார அமைப்பின் கீழ் சமாதானபுரம் கிராமத்தில் மாத்திரம் 158 ஏக்கர் அழிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதத்தின் முதலாவது வாரம் வரையான காலப்பகுதியில் அக்கராயன் குளம் 3 தடவைகள் வான் பாய்ந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X