2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அபிவிருத்திக் குழு மீளாய்வு கூட்டம்

Sudharshini   / 2016 மே 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் .என் .நிபோஜன்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07)இடம்பெற்றது.

இக்கூட்டத்தில்  நகர திட்டமிடல், கரும்பு மற்றும் இறப்பர் உற்பத்தி பற்றி  கவனத்தில்  எடுக்கப்பட்டதுடன் , மாவட்டத்தில் தனியார்  பஸ் நிலையம் அமைத்தல்  மற்றும் கலாசார மண்டபம் அமைத்தல் தொடர்பாக  முக்கிய கவனம் செலுத்தி கலந்துரையாடப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், சி.சிறிதரன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X