2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அம்பலப்பெருமாள்குளத்தின் வான் சேதம்

Menaka Mookandi   / 2016 மே 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளத்தின் வான்பகுதி சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1968ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அம்பலப்பெருமாள்குளம், கிராம குடியேற்றத் திட்டத்தின் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கிராமம் உருவாக்கப்படும்போது அமைக்கப்பட்ட வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக, குளத்தின் கீழான வான்வழியான வீதியே தற்போது பாவனையில் உள்ளது.

இதன் காரணமாக பெரிய வாகனங்கள், குறிப்பாக நெல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள்,  குளத்தின் வான் வழியாகப் பயணிப்பதால், வான்பகுதி சேதமடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தினால், காலத்துக்கு காலம் வான் பகுதி புனரமைக்கப்படுகின்ற போதிலும், அப்பகுதி போக்குவரத்துப் பகுதியாக இருப்பதன் காரணமாக சேதங்கள் தொடர்கின்றன.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களின் போது, குளத்தின் அணைக்கட்டுகள் மற்றும் வான்வழியாக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கிராம பிரதிநிதிகளால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. உயிலங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் ஆகிய குளங்களின் கீழ் நடைபெறும் இவ்வாறான போக்குவரத்துகளினால், குளங்களின் கட்டுமானங்கள் சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X