2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அரசியல்வாதிகளிடம் திட்டமிடல் இல்லை

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“ஆழிப்பேரலை ஏற்பட்டு 12ஆண்டுகள் கடந்த நிலையிலும், முல்லைத்தீவில் ஆழிப்பேரலை ஏற்படுகின்ற போது பாதுகாப்பு மேற்கொள்ளக்கூடிய ஒழுங்குகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை” என இப்பகுதி மக்களினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களிலே கடற்கரையோரம் சவுக்கு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. ஆனால், முல்லைத்தீவு கடற்கரையில் ஒரு மரம் கூட நடப்படவில்லை. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது,  முல்லைத்தீவில் இருந்த ஆயிரக்கணக்கான பனைமரங்கள் அழிவடைந்தன. அதன் பின்னர் பனம் விதைகள் கூட நடப்படவில்லை.

மக்களுக்கு எதனை முதலில் செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் இங்குள்ள அரசியல்வாதிகளிடம் இல்லை. இவர்கள் மக்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாது  செயற்பட்டு வருகிறனர் என மக்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .