2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அல்-பாஹிமிய்யா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Gavitha   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை தோட்டப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள அல்-பாஹிமிய்யா அரபுக் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான 'ஹிப்ழ்' பிரிவுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அல்குர்ஆனை சரளமாகவும் திருத்தமாகவும் ஓதக்கூடியவராக இருத்தல், பாடசாலையில் நான்காம் வகுப்பை அடைந்திருப்பதுடன், நேர்முகப்பரீட்சை நடைபெறும் போது, 12 வயதை அடைந்திருத்தல்,  தேக ஆரோக்கியமுடையவராக இருத்தல் போன்றவை, விண்ணப்பதாரிகளுக்கு இருக்கவேண்டிய தகுதிகளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு, எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 3.30மணிவரை, முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

குறித்த நேர்முகத் தேர்வின் போது, பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதி மற்றும் பாடசாலையில் இறுதியாகக் கிடைக்கப்பெற்ற பரீட்சைப் பெறுபேற்றுப் பிரதி என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு  எம்.ஐ. பரீத் மௌலவி (தலைவர் அல்பாஹிமிய்யா அரபுக் கல்லூரி) 0715168647, 0714254194 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும் என்று கல்லூரியின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X